காங்கிரஸ் சின்னம், ரத்தக் கறை படிந்த சின்னம்: தம்பிதுரை

காங்கிரஸ் கட்சியின் கை சின்னம், ரத்தக் கறை படிந்த சின்னம் என்று, அரவக்குறிச்சி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பரமத்தி ஒன்றியங்களில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற ராஜபக்சேவை, குடியரசு தின விழாவுக்கு வரவேற்று விருந்து வைத்த காங்கிரஸ் கட்சியின் கைச் சின்னம், ரத்தக்கறை படிந்த சின்னம் என்று ஆவேசமாக பேசினார். கை சின்னத்துக்கு வாக்களித்தால், காவிரியில் தண்ணீர் வராது, தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென்றால் இரட்டை இலைதான் வேண்டும் என்று கூறினார்.

Exit mobile version