காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், இன்று சிவசேனா கட்சியுடன் பேச்சுவார்த்தை

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், இன்று சிவசேனா கட்சியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்விரு கட்சிகளும் ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனா கட்சியுடன் இன்று முக்கிய பேச்சு வார்த்தை நடத்துகிறது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிருத்விராஜ் சவான், சிவசேனா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஆட்சி அமைப்பது குறித்து தகவல்கள் வெளியாகும் எனத் தெரிவித்தார். காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணி உடன்பாடு சுமூகமாக முடிந்ததாக கூறிய அவர், சிவசேனாவுடன் இன்று நடக்கும் பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் குழப்பம் இன்றுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version