சத்ருகன் சின்ஹாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தொண்டர்கள்

நடிகரும், காங்கிரஸ் வேட்பாளருமான சத்ருகன் சின்ஹா கலந்து கொண்ட கூட்டத்தில் அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய நபரை காங்கிரஸ் தொண்டர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

நடிகரான சத்ருகன் சின்ஹா கடந்த தேர்தலில் பாட்னா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்ததோடு, பா.ஜ.க.வில் இருந்து வெளியேறி, காங்கிரசில் இணைந்தார். இவருக்கு மீண்டும் பாட்னா தொகுதியை காங்கிரஸ் ஒதுக்கியது. ஆனால் இதற்கு உள்ளூர் காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாட்னாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே காங்கிரஸ் தொண்டர் ஒருவர் சத்ருகன் சின்ஹாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டார். அவரை மற்றவர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Exit mobile version