பிரபல தனியார் பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல்

சென்னை காட்டாங்குளத்தூர் தனியார் கல்லூரியில் மாணவர்கள் பட்டாக் கத்தி, துப்பாக்கியுடன் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர்

காட்டாங்கொளத்தூர் பகுதியில் இயங்கி வரும், பிரபல தனியார் பல்கலைக் கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். குறிப்பாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இங்கு மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் உள்ள தேனீர் விடுதியில் சக மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியால் மற்றொரு பிரிவினரைத் தாக்கினர். மேலும் துப்பாக்கியால் சுட்டதால் மற்றொரு பிரிவினர் அலறியடித்து ஓடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Exit mobile version