வரும் 30ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை

பிரதமராக 2வது முறையாக பதவியேற்ற பிறகு, வரும் 30ம் தேதி முதல் முறையாக பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

பிரதமரின் சென்னை வருகையையொட்டி, விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் கோவை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியை பிடித்தது. மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றார். இந்தநிலையில் பிரதமராக 2வது முறையாக பதவியேற்ற பின்னர், வரும் 30ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிறார். வரும் 24ம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version