உதித் சூர்யா குறித்து சிபிசிஐடியிடம் கல்லூரி முதல்வர்-துணை முதல்வர் வாக்குமூலம்

நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மோசடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக மாணவர் உதித்சூர்யா மீது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நீட் நுழைவுத்தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் திருப்பதியில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோர் தேனி அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் மாணவன் உதித் சூர்யா விவகாரம் தொடர்பாக தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். தங்களிடம் உள்ள ஆவணங்களை காண்பித்து அவர்கள் விளக்கம் அளித்தனர்.

Exit mobile version