டெல்லியில் இன்று அதிகாலை பெய்த மழையால் குளிர்ச்சி அதிகரிப்பு

டெல்லியில் இன்று அதிகாலை பெய்த மழையால் குளிர்ச்சி மேலும் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதன்மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதோடு, ரயில் மற்றும் விமான சேவையும் பாதிப்படைந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை முதல் டெல்லியின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிர்ச்சி அதிகரித்துள்ளது. இந்த மழையால் காற்றில் மாசு குறையும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனிடையே பல பகுதிகளில் மூடுபனியும் நிலவியதால், 10 ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதேசமயம் திடீர் மழையால், பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version