குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து தரைமட்டம்

சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என மீட்புக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

அரியாங்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், உள்ள ‘D’ பிளாக்கில் இன்று காலை திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள், அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு முழுவதும் திடீரென இடிந்து விழுந்து. இதில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 24 வீடுகளும் தரைமட்டமாயின.

நல்வாய்ப்பாக மக்கள் அனைவரும் வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

Exit mobile version