புற்றுநோய் பாதிப்பு – நெல் ஜெயராமனுக்கு முதலமைச்சர் ரூ.5 லட்சம் நிதியுதவி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது நெல்லை காப்போம் என்ற இயக்கம் மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து வருபவர் நெல் ஜெயராமன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் நெல் ஜெயராமன் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக, நெல் ஜெயராமனுக்கு நிதியுதவி அளிப்பதாக அதில் கூறியுள்ளார்.

அவர் விரைவில் பூரண குணமடைந்து மீண்டும், விவசாயிகளுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும், நெல் ஜெயராமனுக்கு உடனடியாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேளாண்மை துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version