புருசோத்தமன் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி

புதுச்சேரி மணவெளி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவான புருசோத்தமன், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள, தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். வழக்கம் போல் விவசாயப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக வந்த அவரை எங்கிருந்தோ வந்த செங்குளவி கொட்டியது. சில நிமிடங்களில் மயங்கி விழுந்த அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் மற்றும் தமிழக, புதுச்சேரி அதிமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version