சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழகம் மற்றும் உலகமெல்லாம் உள்ள தமிழர்களுக்கு எம்.ஜி.ஆர் உந்துசக்தியாக எம்.ஜி.ஆர் விளங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியதற்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்வதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

Exit mobile version