ஸ்டாலினுக்கு கட்டப்பஞ்சாயத்து தலைவர் பதவியே பொருத்தம்: முதல்வர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அதிமுக கூட்டணி நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, வேலூர் நாடாளுமன்ற தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு முழுமுதற் காரணம் திமுக என்று குற்றம்சாட்டினார்.

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி, திமுக ஆட்சி என்றும் தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள நடைபெறுவதற்கு திமுக கட்சியை சேர்ந்தவர்களே காரணம் என தெரிவித்தார். மேலும், ஸ்டாலின் திமுக தலைவர் என்பதற்கு பதிலாக, கட்டப்பஞ்சாயத்து தலைவராக இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.

Exit mobile version