உயர்கல்வி துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: முதலமைச்சர்

உயர் கல்வித்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த காளப்ப நாயக்கன்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இவ்விழாவில் அமைச்சர்கள் தங்கமணி செங்கோட்டையன், அன்பழகன், சரோஜா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, உயர் கல்வித்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், கிராமப்புற மாணவர்கள் ஏராளமானோர் தற்போது உயர்கல்வி படித்து வருவதாகவும் கூறினார். கல்வித்துறைக்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கி சாதனை படைத்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Exit mobile version