15 ஆண்டுகளுக்குப் பிறகு நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரவுள்ளது: முதல்வர்

15 ஆண்டுகளுக்குப் பிறகு நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கேரள முதலமைச்சருடனான பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நதிநீர் பங்கீடுக்காக இரு மாநிலத்திலிருந்தும் குழுக்கள் அமைத்து, அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலைமைச்சர், மழை காலத்திற்குள் குடிமராமத்து பணிகள் நிறைவு பெறும் என்று கூறினார். டெங்கு தொடர்பாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version