ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதன் மர்மம் என்ன?: முதல்வர் கேள்வி

சென்னை சாலிகிராமத்தில் பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏழை எளிய மக்களை வாழ வைக்கும் அரசு, அ.தி.மு.க. அரசு என்று குறிப்பிட்டார். அப்போது, தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.

மக்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று குறிப்பிட்ட அவர், தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்து மறைந்தவர் கருணாநிதி என விமர்சித்தார்.

மேலும், தன்னுடைய வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய முதலமைச்சர், ஸ்டாலின் வெளிநாடு செல்லும் விவரத்தை வெளியிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

 

Exit mobile version