குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து

 

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் ஆளுநருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோருக்கு முதலமைச்சர் பழனிசாமி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், ஒளியின் திருவிழா என அழைக்கப்படும் இந்த நன்னாளில் மன அமைதியும், நல்ல ஆரோக்கியத்தையும் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். தங்கள் குடும்பத்தினருக்கு தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், மகிழ்ச்சியான இந்த தருணத்தில், வரும் ஆண்டு தங்களுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக அமைய வேண்டும் என முதலமைச்சர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த நன்னாளில் நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாக வாழ வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் பழனிசாமி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், ஒளியின் திருநாள் இந்த தீபாவளி நாள் என்றும், நாடு முழுவதும் உள்ள மக்கள் மேல தாளத்துடன் கோலாகலமாக இந்த பண்டிகையை கொண்டாட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version