வடகிழக்கு பருவமழை தீவிரம்: முதலமைச்சர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

Exit mobile version