பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

பத்மஸ்ரீ விருதை பெறும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கிராமப்புற மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி பத்மஸ்ரீ விருதை பெறும் சின்ன பிள்ளைக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பத்மஸ்ரீ விருதை பெறும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கும் அவர் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

இதேபோல பரத நாட்டியத்தில் தனக்கென தனி முத்திரை பதித்து பத்மஸ்ரீ விருதை பெறும் நர்த்தகி நடராஜுக்கு தனது வாழ்த்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெறும் ஸ்டான்லி மருத்துவமனை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமசாமி வெங்கடசாமிக்கும் தனது வாழ்த்துகளை அவர் கூறியுள்ளார்.

கோவை சங்கரா கண் மருத்துவமனை நிறுவனரும் கண் அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர்.வி ரமணிக்கு முதலமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேசைப்பந்து போட்டியில் சர்வதேச அளவில் பதக்கங்களை பெற்ற சரத்கமல் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வானதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தனது இசையால் மகிழ்வித்து கொண்டிருக்கும் ட்ரம்ஸ் சிவமணிக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை அவர் கூறியுள்ளார். திரைப்படத்துறையில் சிறந்து விளங்குவதற்காக பத்மஸ்ரீ விருது பெறும் பிரபு தேவாவுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Exit mobile version