இடைத்தேர்தல்: முதலமைச்சர் பழனிசாமி வரும் 12ம் தேதி முதல் பிரச்சாரம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் வரும் 21 ஆம் தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலை ஒட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தினை மேற்கொள்ள உள்ளார். அதன்படி அக்டோபர் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ள அவர், அக்டோபர் 12, 13 மற்றும் 16ம் தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் வேட்பாளர் வெ. நாராயணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். 14, 15 மற்றும் 18ம் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

 

Exit mobile version