சென்னை தீவுத்திடலில் 45-வது தொழில் பொருட்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்

சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் மாநிலங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 45-வது தொழில் பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தொழில் பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவின் மருத்துவ தலைநகரான தமிழகத்துக்கு பெருமளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் என்றும், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் மாநிலங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version