தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க பல்ஸ் ஆக்ஸ்கிமீட்டரை அதிகளவில் கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது என தெரிவித்துள்ளார். இதற்காக FINGER PULSE OXIMETER என்ற கருவி பயன்படுத்தப்படுவதாகவும், தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகத்தின் மூலம் 43 ஆயிரம் FINGER PULSE OXIMETER கருவிகளை கொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 23 ஆயிரம் கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கருவிகளும் ஓரிரு நாட்களில் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாமல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று நேரடியாக சென்று ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை கண்காணிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தேவையின் அடிப்படையில் இக்கருவிகள் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post