சாத்தையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

சாத்தையாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள சாத்தையாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 26-ம் தேதி முதல் 21 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தண்ணீர் திறப்பால் சுமார் ஆயிரத்து 499 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அவர் கூறியுள்ளார். தண்ணீரை சிக்கமான பயன்படுத்தி விவசாயிகள் உயர் மகசூல் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version