கெலவரப்பள்ளி அணை திறக்க முதல்வர் ஆணை

கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு வரும் 17 ஆம் தேதி முதல் மே மாதம் 17 ஆம் தேதிவரை 90 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருக்கிறார். இதன்மூலம், ஓசூர் சுற்று வட்டாரத்தில் உள்ள எட்டாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெறவும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version