பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர்

பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கடலூர் மாவட்டதைச் சேர்ந்த சந்தோஷ்குமார், சக்தி சிவகண்ணன், மங்கலம் பேட்டை வெங்கடேசன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சபீர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 15 பேர் பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த 15 பேரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version