பூதலூரில் ரூ.78.60 லட்சம் மதிப்பிலான புதிய அரசு பள்ளி கட்டிடம் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 78 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய அரசு பள்ளி கட்டடத்தை முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள செல்லப்பன் பேட்டை கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் கோரிக்கையின் படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 78 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்  மதிப்பில் அப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட உத்தரவிட்டார். இதனையடுத்து, பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்ட  புதிய அரசு பள்ளி கட்டடத்தை முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து முதலமைச்சருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version