கொரோனா தடுப்பு பணிக்காக பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனத்தையும், நடமாடும் உணவக வாகன சேவையையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் டி.எஸ்.எல் தொழில் நிறுவனத்தின் சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக 13 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில் பேட்டரியில் இயங்கும் 3 மருந்து தெளிப்பான் வாகனங்களையும், ஒரு நடமாடும் உணவக வாகனமும் வாங்கப்பட்டது. இதனை பசுமை வழிச்சாலையிலுள்ள முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த வாகனத்தில் 2 மருந்து தெளிப்பான் எடப்பாடி தொகுதியின் பயன்பாட்டிற்கும், மீதமுள்ள ஒன்று சேலம் மாநகராட்சியின் பயன்பாட்டிற்கும், நடமாடும் உணவகம் பெருநகர சென்னை மாநகராட்சி பயன்பாட்டிற்கும் வழங்கப்படவுள்ளது.
Discussion about this post