News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

புனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்

Web Team by Web Team
June 23, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம், வீடியோ
Reading Time: 1 min read
0
புனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்
Share on FacebookShare on Twitter

28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

சென்னை ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு ஏரியை, பசுமை பூங்காவாக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பருத்திப்பட்டு ஏரியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

89 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் பொதுமக்கள் நடை பயிற்சிக்காக 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடம், சிறுவர்கள் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை வசதிகள் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக திறந்த வெளி அரங்கமும், சிற்றுண்டி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பறவைகள் வந்து தங்குவதற்கு ஏரியில் உள்ளே இரண்டு தீவுகள் அமைக்கப்பட்டுள்ளது. குப்பை மேடாக காட்சி அளித்த பருத்திப்பட்டு ஏரி தற்போது சுற்றுலா தலமாக மாற்றியிருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஓய்வு நேரத்தில் அமைதியான சூழலில் மனதிற்கு உற்சாகம் ஊட்டும் அளவில் இருப்பதாகவும் எங்கேயும் இல்லாத வகையில் வெளிநாட்டு பறவைகளை இங்கு காண முடிவதாகவும், ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடக்கூடிய இந்த இடத்தில் படகு போக்குவரத்து துவங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர் பெண்கள்.

தண்ணீரின் தூய்மையை பாதுகாக்க தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படுவதாகவும், விரைவில் படகு போக்குவரத்து துவங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி இந்த பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழகத்தில் 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிக்கப்பட்ட பிறகு திறந்து வைத்த முதல் பசுமை பூங்கா, பொதுமக்களின் கனவுகளில் ஒன்றாகும்.

Tags: ஆவடிஆவடி பருத்திப்பட்டு ஏரிபசுமை பூங்காபருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா
Previous Post

பொள்ளாச்சி அருகே தனியார் ரிசார்ட்டுகளில் வருவாய்த்துறை, காவல் துறை திடீர் ஆய்வு

Next Post

அதிமுக சார்பில் கோயில்களில் நடத்தப்பட்ட யாகங்களின் பலனாக ஆங்காங்கே மழை

Related Posts

ஆவடி நகராட்சியை, மாநகராட்சியாக மாற்றும் மசோதா தாக்கல்
TopNews

ஆவடி நகராட்சியை, மாநகராட்சியாக மாற்றும் மசோதா தாக்கல்

July 19, 2019
ஆவடி அருகே வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மாரத்தான் ஓட்டம்
செய்திகள்

ஆவடி அருகே வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மாரத்தான் ஓட்டம்

March 17, 2019
20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் -அமைச்சர் பாண்டியராஜன்
TopNews

20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் -அமைச்சர் பாண்டியராஜன்

December 15, 2018
Next Post
அதிமுக சார்பில் கோயில்களில் நடத்தப்பட்ட யாகங்களின் பலனாக ஆங்காங்கே மழை

அதிமுக சார்பில் கோயில்களில் நடத்தப்பட்ட யாகங்களின் பலனாக ஆங்காங்கே மழை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version