பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

இரண்டாம் போக பாசனத்திற்காக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இரண்டாம் போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை அறிக்கையொன்றில் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை கால்வாய் மற்றும் காலிங்கராயன் வாய்காலின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

நீர்திறப்பின் மூலம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 40 ஆயிரத்து 247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்

நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர்மகசூல் பெற விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Exit mobile version