கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை – பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி

தொல்லியல்துறை முதுகலைப் பட்டயப்படிப்பில், தமிழ்மொழிக்கு அனுமதி வழங்கி, தன்னுடைய கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொல்லியல் முதுகலை பட்டயப்படிப்பில் தமிழ் மொழியைச் சேர்க்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, உடனடியாக தொல்லியல்துறை முதுகலைப் பட்டயப்படிப்பில், தமிழ் மொழிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தமது கோரிக்கையை உடனடியாக ஏற்று, தொல்லியல் முதுகலைப் பட்டயப்படிப்பில், தமிழையும் கல்வித் தகுதியில் சேர்த்து அனுமதி வழங்கியமைக்காக, தனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version