தமிழகத்தின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி

இந்தியா சீனா இடையேயான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதற்காக முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு பெரும் தலைவர்கள் சந்திப்பதற்கு பாரம்பரியம் வாய்ந்த தமிழகத்தின் மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்ததற்காக தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் மதிப்பை பிரதமர் மோடி உலக அரங்கில் உயர்த்தியுள்ளதாகவும், உலக நாடுகளின் பார்வை தமிழகத்தின் பக்கம் திரும்பியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு பெரும் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தமிழக மக்களுக்கும், மாணவ செல்வங்களுக்கும், தலைவர்களை மகிழ்வித்த கலைஞர்களுக்கும், இதற்கான பணிகளை மேற்கொண்ட அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Exit mobile version