நியூயார்க் சென்றடைந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

லண்டன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் பழனிசாமி தொழில் முதலீட்டாளர்களுடன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் சென்றடைந்தார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் நியூயார்க் சென்றுள்ள முதலமைச்சர் அமெரிக்கத் தமிழ்த் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்கத் தொழில் முனைவோர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து அமெரிக்க வாழ் தமிழர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

தமிழகத்தில் தொழிற்சாலைகளை நடத்தி வரும் கேட்டர்பில்லர், ஃபோர்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசும் முதலமைச்சர், யாதும் ஊரே என்கிற இணையதளத்தை துவங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 

Exit mobile version