கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை ஆய்வு

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பெரும் அளவிற்கு சேதம் ஏற்பட்டது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், பெரிய அளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், முழு வீச்சில் சீரமைப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த 20-ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், கஜா புயால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக இன்றிரவு ரயில் மூலம் முதலமைச்சர் பழனிசாமி நாகை செல்கிறார்.

Exit mobile version