தேசிய டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக மாணவருக்கு முதலமைச்சர் பாராட்டு

தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பெரம்பலூரை சேர்ந்த மாணவனுக்கு ஒரு லட்சம் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.

பெரம்பலூர் தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவர் சூர்யா. இவர் டென்னிஸ் விளையாட்டில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், 2017 மற்றும் 18-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி தெலுங்கானாவில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு விளையாடிய சூர்யா, வெண்கலப் பதக்கம் வென்றார்.

அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழை வழங்கினார். அதனை மாணவர் சூர்யாவுக்கு பள்ளியின் தாளாளர் வழங்கினார்.

Exit mobile version