News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

4 தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் வேண்டுக்கோள்

Web Team by Web Team
May 17, 2019
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
4 தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் வேண்டுக்கோள்
Share on FacebookShare on Twitter

சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றவும் அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். திமுக ஆட்சியில் நிலவிய மின்வெட்டால் தமிழ்நாடே அல்லல்பட்டதை மறக்க முடியுமா? என கேள்வி எழுப்பியிருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், கட்ட பஞ்சாயத்து, ரவுடிகளின் ராஜ்ஜியம், நில அபகரிப்பு, உள்ளிட்ட திமுக முக்கிய புள்ளிகளின் அராஜகம் எல்லோருடைய மனதிலும் பசுமையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

வன்முறையும், அராஜகமும் திமுகவுடன் ஒட்டிப் பிறந்த பிறவி குணங்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் அக்கட்சியினரின் அடாவடிகளும் குற்றச் செயல்களும் தொடர்ந்து கொண்டிருப்பதை செய்திகளில் பார்க்க முடிவதாக தெரிவித்துள்ளனர். இத்தகைய மனநிலையில் வாழும் திமுகவினர் சிறிதளவு வெற்றியை சுவைத்தாலும், அதனால் சமூகத்திற்கு ஏற்படும் கேடுகளை யாரேனும் மறுக்க முடியுமா என்றும் குறிப்பிட்டுள்ள அவர்கள், திமுகவினர் தலையெடுத்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு, வாக்காளப் பெருமக்களுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால அரசு தமிழகத்தை அமைதிப் பூங்காவாய் மாற்றியது என்றும் விலையில்லா அரிசி, மிக்ஸி, கிரைண்டர், கறவை மாடு உள்ளிட்ட எண்ணிலடங்கா உதவிகளை தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்து எல்லோரது வாழ்விலும் வசந்தத்தை வீச செய்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சுட்டிக்காட்டி உள்ளனர். அதிமுக ஆயிரம் காலத்துப் பயிர்; இது என்றென்றும் ஆலமரமாய் நிலைத்து நிற்கும், மக்களுக்கு தொண்டாற்றும் என ஜெயலலிதா கூறியதை குறிப்பிட்டுள்ளனர்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம், எதிர்கால தேவைக்காக காவேரி-கோதாவரி நதிகள் இணைப்பு திட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மக்களின் உண்மைச் சேவகர்களாகிய அதிமுகவின் நற்பணிகள் தொடரவும், தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழவும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அதிமுக வேட்பாளர்களை வெற்றிப்பெற செய்யுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: அதிமுகஇடைத்தேர்தல்எடப்பாடி பழனிசாமிஓ.பன்னீர்செல்வம்தமிழக முதலமைச்சர்துணை முதலமைச்சர்வாக்காளர்கள்
Previous Post

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: மம்தா குறித்து பிரதமர் மோடி விமர்சனம்

Next Post

ஜம்மு காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Related Posts

ஒரே கட்டமாக நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
Top10

ஒரே கட்டமாக நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

January 27, 2022
சொன்னீங்களே செஞ்சீங்களா? இணையத்தைக் கலக்கும் அதிமுக போராட்டம்
TopNews

சொன்னீங்களே செஞ்சீங்களா? இணையத்தைக் கலக்கும் அதிமுக போராட்டம்

July 28, 2021
அதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
TopNews

அதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

July 23, 2021
ஈரோடு புறநகர் இரண்டாக பிரிப்பு… அதிமுக தலைமைக் கழக அறிவிப்பு
TopNews

ஈரோடு புறநகர் இரண்டாக பிரிப்பு… அதிமுக தலைமைக் கழக அறிவிப்பு

July 21, 2021
அதிமுக நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க:  இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் மனு
TopNews

அதிமுக நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க: இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் மனு

July 20, 2021
“உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவின் வெற்றிக்கு, அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்”
TopNews

“உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவின் வெற்றிக்கு, அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்”

July 16, 2021
Next Post
ஜம்மு காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version