ஜஸ்வந்த் சிங் மறைவு – முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஜஸ்வந்த் சிங், நிர்வாக செயல் திறன் மிக்கவர் என்றும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் அவர் வைத்திருந்த நட்பை நினைவுகூர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜஸ்வந்த் சிங்கின் மறைவை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், வெளியுறவு, பாதுகாப்பு, நிதித்துறை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றியவர் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Exit mobile version