ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி முதல்வர், துணை முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கவுள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை வடபழனியில் தென் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதேபோல், வியாசர்பாடியில் வடசென்னை வடக்கு, கிழக்கு அதிமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

Exit mobile version