ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது, அவர் பொம்மை – அதிமுக எம்பி சி.வி.சண்முகம் காட்டம்!

 

அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம், விழுப்புரத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் அவர்களின் கண்டன உரை :

இரண்டாண்டு காலத்திலே திமுக அரசு என்ன சாதித்து இருக்கிறது. புதிய வேளைவாய்ப்புக்களை உருவாக்கியிருக்கிறதா? படித்து வேலைதேடும் இளைஞர்களுக்கு என்ன செய்திருக்கிறது. மக்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. விவசாயிகளுக்கு என்ன செய்துள்ளது? விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக என்ன செய்திருக்கிறது. செஞ்சியில் விற்பதற்கு விவசாயிகள் நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டியிருக்கிறது. அமைச்சராக பதவியேற்றிருக்கும் மஸ்தானுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. அவர் செய்யும் வேலை சாராயம் விற்பது தான். இதனை நாங்கள் கூறவில்லை. ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் காட்சிப்படுத்துகின்றன. சாராய ஜமீன் மருகூர் ராஜாவுக்கு மஸ்தான் கேக் ஊட்டுகிறார். கேட்டால் யாரென்று தெரியாது என்கிறார்.

திமுகவில் சேர்வதற்கு முன்பு மூன்று முறை குண்டாசில் கைது செய்யப்பட்டவர். கவுன்சிலராக அவர் மனைவி உள்ளார். அவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்கள் திமுகவின் மேற்பார்வையில் விழுப்புரம் மாநகரில் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டின் காவல்துறை சிறந்த காவல்துறை. ஆனால் அதனை ஸ்டாலின் கையாலாகத்துறையாக ஆக்கிவிட்டார். பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். சைலேந்திர பாபுக்கு என்ன வேலை? கொலை, கொள்ளை, கற்பழிப்பு, உளவுத்துறை கொண்டு பல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் காலையில் எழுந்தால் சைக்கிள் ஓட்டுகிறார். முக ஸ்டாலின் வீட்டிலே எடுபுடி வேலை செய்துகொண்டிருக்கிறார். காவல்துறை முக ஸ்டாலின் குடும்பத்திற்கு ஏவல் வேலை செய்கிறது. இந்த காவல்துறை முதலிலேயே எல்லாவற்றையும் கவனித்திருந்தால் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சாவுகள் நடந்தேறாமல் இருந்திருக்கும்.  டிஜிபி விளக்கம் கொடுத்துள்ளார் கள்ளச்சாராயம் அல்ல விஷச் சாராயம் என்று சொல்கிறார். அரளிவிதையை அரைத்து குடித்தால் என்ன, பால்டாயிலைக் குடித்தால் என்ன, விஷம் விஷம் தானே!

ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது, அவர் பொம்மை. சாராய ஆலைகளின் லாபம் கரூர் கேங் மற்றும் ஸ்டாலின் குடும்பத்திற்கும்தான் செல்கிறது. ஒரு ஆண்டுக்கு மட்டும் அதாவது கலாலுக்கு வரக்கூடிய வரி 10,000 கோடி ரூபாய் ஸ்டாலின் குடும்பத்திற்கும் செந்தில்பாலாஜிக்கும் செல்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 220 பார் உள்ளது. ஒரு பாருக்கும் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சொல்கிறார். அப்போது என்கிருந்து குடிக்கிறார்கள் மதுப்பிரியர்கள். அந்த மதுபானங்கள் எந்த கணக்கில் எழுதப்பட்டது. ஆக இந்த அரசு, போலி மதுபானங்கள், கலால் வரி செலுத்தாமல் வந்த காரணத்தால் சத்தீஸ்கரில் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோல தமிழகத்தில் இரண்டு ஆண்டுகள் திமுக ஆட்சியில் ஏலம் விடாமல் முறைகேடாக நடத்தப்பட்ட வருவாய் இழப்பு உள்ளது. பத்துரூபாய் மந்திரி என்றால் செந்தில் பாலாஜிதான். அந்த பத்து ரூபாயில் இரண்டு ரூபாய் செந்தில் பாலாஜிக்கும், மீதம் எட்டு ரூபாய் திமுக குடும்பத்திற்கும் செல்கிறது. இது விசாரிக்கப்பட வேண்டும்.

Exit mobile version