கொல்கத்தாவில், பாஜக தலைவர் அமித்ஷா சென்ற வாகனம் மீது தாக்குதல்

கொல்கத்தாவில், பாஜக தலைவர் அமித் ஷாவின் பிரசார வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

மேற்கு வங்கத்தில் உள்ள 9 நாடாளுமன்ற தொகுதிகளில் வரும் 19 ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி கொல்கத்தா நகரில், பாஜக தலைவர் அமித்ஷா தலைமையிலான பிரமாண்ட பேரணி நடைபெற்றது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பேரணியின்போது, திடீரென மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.

அமித்ஷா சென்ற வாகனம் மீது கற்களையும், கம்புகளையும் அந்த கும்பல் வீசியது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. பேரணியில் வந்தவர்களுக்கும் மற்றொரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. பின்னர், போலீசார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றதால் நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version