சீனா – தைவான் எல்லையில் போர் மூளும் அபாயம்!

தைவானை நோக்கி சீன ராணுவம் 25 போர் விமானங்கள், 3 போர் கப்பல்களை அனுப்பியுள்ளதாக தைவான் ராணுவ அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தைவான் ராணுவமும் எல்லைப்பகுதியில் போர் விமானங்கள், போர் கப்பல்களை அனுப்பியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனா – தைவான் எல்லையில் எந்த நேரமும் போர் மூளும் அபாயம் நிலவுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தைவான் மீது படையெடுக்க போவதாக சீனா மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version