மாமல்லபுரத்துக்கு முதலமைச்சர் நாளை வருகை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும், பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து, நாளை பார்வையிடுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், வருகிற 11-ம் தேதி, மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். அப்போது, தலைவர்கள் இருவரும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், பட்டர்பால், ஐந்துரதம் பகுதிகளை பார்வையிடுகின்றனர். இதனையொட்டி, மாமல்லபுரத்தை பசுமை நகரமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாமல்லபுரம் செல்ல உள்ளார்.

Exit mobile version