பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், வரும் 7-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட இருக்கிறது. பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பு, பச்சை நிற குடும்ப அட்டைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் 2 கோடியே ஒரு லட்சம் குடும்பத்தினர் பயன் அடைய இருக்கின்றனர்.

Exit mobile version