பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற பொதுவிருந்தில் முதல்வர் பங்கேற்பு

பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தையொட்டி சென்னை கே.கே.நகரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற பொதுவிருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டார்

பேரறிஞர் அண்ணாவின் 50வது ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, கோயில்களில் பொதுவிருந்து நடத்தப்பட்டது. சென்னை கே.கே.நகரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற பொதுவிருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவருக்கு பொதுமக்கள் அன்பான வரவேற்பு அளித்தனர். இதனைதொடர்ந்து பொதுமக்களோடு ஒன்றாக அமர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணவருந்தினார்.

இதேபோன்று, மருந்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்திய அவர், தேவையானதை கேட்டு உண்ணுமாறு அருகில் இருந்தவர்களை கேட்டுக் கொண்டார்.

Exit mobile version