இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது சேரனா ?

இன்று பிக்பாஸ் வீட்டில் 77வது நாள்.இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற நாமினேஷனில் உள்ளவர்கள் சேரன், லாஸ்லியா, கவின் ,முகென், ஷெரின்.இந்த ஐவரிலிருந்து இன்று ஒருவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றபடுவார்.நேற்று ஷெரின், வனிதா, தர்ஷன் ஆகியோர் இடையே சண்டை ஏற்பட்டது.கமல், பல இடங்களில் வனிதாவை கலாய்க்கும் வகையில் பேசினார்.ஆனால் வனிதாவோ அதனை பொருட்படுத்தாமல் ஷெரின் மீது குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தார்.இப்படி இவர்களின் சண்டையிலேயே நேற்றைய நாள் முடிந்தது.

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து யாரும் வெளியேற்றப்பட வில்லை.எனவே இந்த வாரம் சேரன் தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறார் எனவும், அவர் சீக்ரெட் அறையில் தங்கவைக்கப்படுகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.கவின், லாஸ்லியா, முகென் ஆகியோர்கள் ஏற்கனவே பலத்தடவை நாமினேட் ஆனவர்கள்.ஆனால் ஷெரின் இரண்டாவது முறையாக நாமினேஷனில் வந்துள்ளார்.எனவே ஷெரின் காப்பாற்றப்படுவதற்கும் அதிகம் வாய்ப்புகள் உள்ளது.ஆனால் மக்கள் யாரை வெளியேற்ற போகின்றனர் என்பதை பொருத்து இருந்தே காணவேண்டும்.

Exit mobile version