பிக்பாஸ் வீட்ல இன்னைக்கு பஞ்சாயத்து இருக்கு…

பிக்பாஸ் வீட்டில் இன்று 72 வது நாள்.எத்தனையோ சண்டை, போட்டிகள் வந்தாலும் அனைத்தையும் கையாண்டு 8 போட்டியாளர்கள் 100 நாட்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.நேற்று பிக்பாஸ் வீட்டில் open nomination நடைப்பெற்றது.அதில் ஒவ்வொருவரும் தங்களின் மனதிற்கு தோன்றியவரை நாமினேட் செய்தனர்.கவின், சேரன் மற்றும் ஷெரினை நாமினேட் செய்ய, வனிதாவோ நீங்கள் சொல்லும் காரணம் ஏற்கும்படி இல்லை என ஏத்திவிட்டார்.

பின்னர் சாண்டியோ, கவினையும் லாஸ்லியாவையும் நாமினேட் செய்தார்.காரணம், கவின் பழையபடி இருக்க வேண்டும் இல்லையென்றால் வீட்ட விட்டு வெளியே போ டா என கூறிவிட்டு அழுக ஆரம்பித்தார்,இப்படி கவின் ,சாண்டி அழுக,வனிதாவோ அழுகுற அளவுக்கு இங்கு என்ன நடந்துச்சு? என சொல்லி பேச தொடங்க,லாஸ்லியா பதில் சொல்ல, இப்படி நேற்று முழுவதுமே சண்டையிலேயே போய் கொண்டிருந்தது.அப்போது வனிதாவோ, கவினிடம் நீ செஞ்ச தப்புக்காக சாக்‌ஷி வெளில போயிட்டா, அவள உள்ள கொண்டு வந்துட்டு நீ வெளியே போ என கூறினார்.

அவர் சொன்னதை போலவே இன்றைக்கு சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.மூவரும் வருவதை கண்ட போட்டியாளர்கள் அவர்களை கட்டி அனைத்து கத்துகின்றனர்.சாக்‌ஷியோ வந்தவுடன் ஷெரினிடம் ‘நீ எப்படியாவது ஜெயிக்க வேண்டும்’என கூற ஷெரினோ எப்படி என கேட்கிறார்.ஆனால் கவின் முகத்தில் சாக்‌ஷியை பார்த்தவுடன் மரண பயம் தெரிகிறது.இன்னைக்கு பிக்பாஸ் வீட்ல நிச்சயம் பஞ்சாயத்து இருக்கு.

Exit mobile version