மெட்ராஸ் டூ மதுர! ஊரெல்லாம் அதிர! மாநாடுக்கு கிளம்பிய தொண்டர்கள்!

அதிமுக மதுரை மாநாட்டிற்கு புறப்படும் வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனத்தை முன்னாள் அமைச்சரும் ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு அனைத்திந்திய அண்ணா திராவிட கழக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நாளை மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற உள்ளது,

தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவின் பிற மாநில அரசுகளும் உற்று நோக்கும் வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அதிமுக மாநாடு, இந்திய அரசியல் வரலாற்றில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது,

இந்நிலையில் இம்மாநாட்டில் பங்கேற்க அதிமுக கழக தொண்டர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அழைப்பை விடுத்துள்ள நிலையில் தமிழகம் மட்டும் இல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து கழக தொண்டர்கள் குடும்பங்களோடு தங்களுடைய குடும்ப நிகழ்ச்சியை மாநாட்டிற்கு புறப்பட்டு வருகின்றனர்,

அதனை தொடர்ந்து வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்க வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் வாகனங்கள் புறப்பட்டனர், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புறப்படும் வாகனங்களை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சரும் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். சுமார் 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் 500க்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள் இந்த மாநாட்டிற்கு புறப்பட்டு உள்ளனர்.

Exit mobile version