சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், தியாகராயநகர், நுங்கம்பாக்கம், பெரம்பூர், வில்லிவாக்கம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புறநகர் பகுதிகளிலும் மழை தொடர்வதால், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Exit mobile version