சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மாலைக்குள் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Exit mobile version