முதலமைச்சர் தொகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு

திமுகவை நம்பி வாக்களித்ததற்கு கழுத்தை அறுத்துவிட்டார்கள் என்று கொளத்தூர் அவ்வைநகர் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட அவ்வை நகர் குடியிருப்பில் உள்ள 60-க்கும் அதிகமான வீடுகளை மாநகராட்சி இடித்துள்ளது.

10ஆம் தேதி இது தொடர்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையில் 5நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் போராடியும் அதனை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை.

பொதுமக்களுக்கு கால அவகாசமோ, மாற்று நிவாரண ஏற்பாடுகளோ செய்யாமல் கட்டிடங்களை இடித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திமுகவை நம்பி வாக்களித்ததற்கு தங்களின் கழுத்தை அறுத்து விட்டதாகவும், தற்போது வீடு வாசலை இழந்து நிராதரவாக இருப்பதாகவும் அவர்கள் கண்ணீர் மல்க குற்றம்சாட்டியுள்ளனர்.

Exit mobile version