சிலைகடத்தல் சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கோவில் சிலைகள், கோவில் நகைகள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு 2018ம் ஆண்டு ஜூலை மாதம்அமைக்கப்பட்டது. தற்போது வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வை நியமித்த அறிவிப்பாணையை மாற்றியமைத்து உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொது நல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளே சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பர் எனவும், ஜாமின் மனுக்களை, ஜாமின் மனுக்களை விசாரிக்கும் நீதிபதிகள் விசாரிப்பர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version