சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பணி ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவருடன் பணியாற்றும் காவல் அதிகாரிகள், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மீது புகார் கூறி வந்தனர். மேலும், தங்களை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அப்படி ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Exit mobile version